கோவை அருகேபுத்தாண்டு தினத்தில் அணையில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபசாவு.

கோவை ஜன 2 கோவை சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன் , இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மூத்த மகன் புகழேந்தி ( வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு முருகநாதன் நேற்று தனது குடும்பத்தில் உடன் ஒரு டெம்போ வேனில் கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றார். அப்போது அவர்கள் நரசிபுரம் சாலையில் உள்ள புதுக்காட்டு வாய்க்கால் தடுப்பனையில் குளிக்க முடிவு செய்தனர்.,அதன்படி குடும்பத்தினர் அந்த தடுப்பணையில் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தனர். புகழேந்தியும் தடுப்பணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்துஆலாந்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . போலீசார்,மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புத்தாண்டை கொண்டாடசென்ற மாணவன் தடுப்பணையில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.