அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பணம்மோசடி செய்தவர் கைது…

கோவை சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சரண்யா (வயது 33) இவர் திருச்சி ரோட்டில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்ஒருவர் மூலமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 31) என்பவர் அறிமுகமானார் .அவர் சரண்யாவிடம் தனக்கு முக்கிய பிரமுகர்களை தெரியும் .நீங்கள் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவேன் என்று ஆசைவாரத்தை கூறினாராம் .அதை நம்பிய சரண்யா ரூ 1 லட்சத்து 55 ஆயிரத்து 500 கொடுத்தார். ரஞ்சித் குமார் அரசு வேலை வாங்கி தரவில்லை .மேலும் வங்கி பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் சரண்யா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமாரை நேற்று கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.