ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்த ஆசாமிக்கு வலை…

கோவை பீளமேடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் நேற்று தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார் .அவரது கணவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெண் அங்கு தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் அவரது அருகே சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு நடுரோட்டில் வைத்துபாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்று எதிர்பார்க்காத அந்த பெண் கூச்சலிட்டதும் அங்கிருந்துஅந்த நபர் வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.