கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 47) கூலி தொழிலாளி.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துக்குமார் (வயது 37)கட்டிட தொழிலாளி.மழை நேரங்களில் மகேந்திரன் வீட்டு தண்ணீர் முத்துக்குமார் வீட்டு சுவரில் விழுந்தது.இதை முத்துக்குமார் கண்டித்தார்.இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் மகேந்திரனை வெட்டினார். இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து மகேந்திரனின் மகன் சதீஷ்குமார் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் கைது செய்தார் . இவர் மீது கொலை முயற்சி உட்பட 4பிரிவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு – பக்கத்து வீட்டு வாலிபர் கைது..!
![](https://www.newsexpresstamil.com/wp-content/uploads/2022/08/202009142351090014_Near-Vallanad-Husband-To-the-wife-Scythe-cut-Youth-arrested_SECVPF.jpg)
Leave a Reply