வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை,வெள்ளி திருட்டு- கோவையில் மர்ம ஆசாமிகள் கைவரிசை..!

கோவை :சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நந்தகுமார் ( வயது 30) பஸ் கம்பெனி அதிபர் ‘இவர் தன் மனைவி சங்கமித்ராவுடன் கோவில் பாளையம், கிரவுண்ட் சிட்டி குடியிருப்பில் வசித்து வருகிறார்.சங்க மித்தரவின் தாயார் மலர்விழி ,சங்கமித்ரா வீட்டுக்கு அருகில் தனியாக வசித்து வருகிறார். சங்கமித்ராவுக்கு குழந்தை உள்ளது .இந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலர்விழி வீட்டை பூட்டிவிட்டு மகள் சங்க மித்ரா வீட்டுக்கு வந்துள்ளார் .நேற்று முன் தினம் தனது வீட்டிற்கு திரும்ப வந்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 38 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணவில்லை. இதன் மதிப்பு ௹ 15 லட்சம் இருக்கும். இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பீரோவில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது .இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.