மூதாட்டி, கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு – 2 கொள்ளையர்கள் கைது..!

கோவை சூலூரில் உள்ள ஜெர்மன் கார்டனை சேர்ந்தவர் ஈஸ்வரி ( வயது 74) சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர் .

இதே போல செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருபவர் கவுசிக் (வயது 22) இவரை 2 பேர் வழிமறித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினார். இந்த நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுனோஸ் உசைன் ( வயது 22 )ஆந்திராவைச் சேர்ந்த மொகல் ஜாபர் ( வயது 21) என்பது தெரியவந்தது . இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். நகை மீட்கப்பட்டது.