கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மகளிர் தின கொண்டாட்டம்..!

கோவை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரே நிறத்தில் சேலை அணிந்து பணிக்கு வந்தனர்.இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், அவரது துணைவியார் சுவேதாபாலகிருஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சுகாசினி, சந்தீஸ் ‘மதிவாணன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பெண் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் மலர் கொடுத்தும்,வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்..