கிணற்றில் குதித்து பெண் தற்கொலை..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள மோள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி..இவரது மனைவி லட்சுமி (வயது 51 ) இவர் கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்,.இந்த நிலையில் நேற்று இவர் சர்க்கரை கலந்த டீ குடித்தாராம் .இதை இவரது மகன் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் ஆறுமுகம் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.