17 வயது சிறுமி கர்ப்பம்… பெயிண்டர் போக்சோவில் கைது..!

கோவை எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் ( வயது 23) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது ..அதைத் தொடர்ந்து ஹரிதாஸ் சிறுமியை ஆசை வார்த்தை காட்டி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார் .இதையடுத்து அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.பெற்றோர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹரிதாசை நேற்று கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..