நெல்லை ஃபுட் ப்ராடக்ட் பெயரில் விநியோகஸ்தர் நியமித்ததாக கூறி ரூ.65 லட்சத்து 82 ஆயிரம் மோசடி – டுபாக்கூர் ஆசாமி கைது.!!

ஆவடி : முன்னணி தமிழ் நாளிதழில் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மேலூர் தாலுக்கா தந்தை பெரியார் தெரு அழகர்சாமியின் மகன் சபரி மணிகண்டன் ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரம் விஎஸ் நகர் பகுதியில் தங்கவேலின் மகன் டிஎம் மாறன் வயது 49 என்பவன் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் சூப்பர் ஸ்டாக் கிஸ்ட் தேவை என கவர்ச்சிகரமான விளம்பரத்தை கொடுத்து இருந்தான். இதைப் பார்த்த நான் மாறனை அணுகி என்னையே ஃபுட் ப்ராடக்ட்ஸ் டிஸ்ட்ரிபியூட்டராக நியமிக்கும்படி கூறினேன் . அந்த பிராடும் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றி வந்தான். நான் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தான் . இதேபோல் நாகர்கோவிலை சேர்ந்த முகமது 2. டி நகரைச் சேர்ந்த சீனிவாசன் 3. கன்னியாகுமரியைச் சேர்ந்த ததே யூஸ் வில்சன் 4. மதுரையைச் சேர்ந்த புரட்சிதாசன் 5. நெய்வேலியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை இதே போல் ஏமாற்றி ரூபாய் 65 லட்சத்து 82 ஆயிரத்து 424யை ஏமாற்றி உள்ளான் . இது சம்பந்தமாக ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் புகாரை பெற்றுக் கொண்டு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி துரித விசாரணை மேற்கொண்டார்  துணை ஆணையர் பி பெருமாள் புகார்தாரர் சபரி மணிகண்டனிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி அதிரடி நாயகி காசு பணத்திற்கு ஆசைப்பட மாட்டார். குற்றவாளி கைது செய்யப்படுவார் என நம்பிக்கையுட்டினார். அவர் கூறிய அரை மணி நேரத்திற்கு எல்லாம் ஊரை ஏமாற்றிய குற்றவாளி டி எம் மாறனை அதிரடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்..