காரில் வந்த கல்லூரி மாணவரிடம் செயின் பறிப்பு – ஸ்கூட்டரில் தப்பிய கொள்ளையன் கைது.!!

கோவை காந்திமா நகரைசேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் அருள் மாதவன். கல்லூரியில் படித்து வருகிறார் .இவர் நேற்று கொடிசியா ரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தார்.இதை அருண் மாதவன் தடுத்தார் . இதனால் அரை பவுன் செயின் மட்டும்கொள்ளையனிடம் கிடைத்தது .ஒரு பவுன் செயினை அருள் மாதவன் பிடித்துக் கொண்டார். இந்த நிலையில் செயினுடன் ஸ்கூட்டரில்அந்தக் கொள்ளையனும், அவரது2 நண்பர்களும் தப்பி ஓடமுயன்றனர். இதை பார்த்த மாதவன் தனது காரில் துரத்திச் சென்றுஅவர்களில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தார்.அவர் பீளமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.போலீசார் அந்த ஆசாமியை கைது செய்தனர்.விசாரணையில் அவர் சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த தாமோதரன் சாமி மகன் முகேஷ் குமார் ( வயது 21) என்பது தெரிய வந்தது .இவரிடமிருந்து அரை பவுன் செயின் மீட்கப்பட்டது.தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.