சாலையை கடக்கும் போது கார் மோதி பெண் பரிதாப பலி- கணவர், மகள் படுகாயம்..

திருப்பூர் மாவட்டம் ,கோமங்கலம் பக்கம் உள்ள புதுப்பாளையம்| கோழி குட்டையை சேர்ந்தவர் லட்சுமண சாமி .இவரது மகள் ராணி (வயது 23) நேற்று லட்சுமண சாமி அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 3) இவர்கள் நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தனர்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராணி நேற்று இறந்தார் .கணவர் லட்சுமண சாமி மகள் பிரியதர்ஷினி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கார் ஓட்டி வந்த கோவை கணபதியை சேர்ந்த துரைராஜ் (வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.