ஐ.டி. ஊழியர் வீட்டில் தங்கம், வைர, வெள்ளி நகைகள் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், விஸ்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் கிருஷ்ணன் .ஐ .டி. ஊழியர்.இவரது பெற்றோர் காளப்பட்டி, பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார்கள்.கடந்த 22 ஆம் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 14 பவுன் தங்க,வைர நகைகள் ,2 கிலோ வெள்ளி ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடிசென்று விட்டனர். இது குறித்து அவரது மகன் அரவிந்த் கிருஷ்ணன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.