ஏர் கம்ப்ரசர் மூலம் சுத்தம் செய்த போது உடலில் காற்று புகுந்து வடமாநில வாலிபர் பரிதாப பலி..

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாணுகுமார் (வயது 27) இவர் பீளமேடு பக்கம் உள்ள சின்னியம்பாளையம் ஆர்.ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை செய்து முடிந்த பிறகு அவரது உடல் முழுவதும் பஞ்சு ஒட்டியிருந்தது. அதை அவருடன் வேலை பார்த்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர குமார் ( வயது 25) என்பவர் ஏர் கம்ப்ரசர் மூலம் சுத்தம் செய்தாராம்,’ ஆசன வாயிலில் சுத்தம் செய்த போது காற்று உடலில் புகுந்து குடல் வீங்கி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மரியமுத்து ,சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தர்மேந்திர குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.