பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 14 – ம் தேதி சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்று முதுகலை பட்டப் படிப்பு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வில் ” தமிழ்நாட்டுக்குரிய தாழ்ந்த சாதிகள் எவை” என வினா கேட்கப்பட்டு “மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன்” என்ற நான்கு சாதிகளின் பெயர்கள் விருப்ப பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி தலைவர் விவேக் முன்னிலை வகித்தார்.

 

இதில் சுமார் நூற்றுக் கணக்கான பா.ஜ.க வினர் கலந்து கொண்டு பெரியார் பல்கலைக் கழகத்தின் அந்த வினாவை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

மேலும் பெரியார் பல்கலைக் கழக நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

இதில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி தலைவர் விவேக், சமூக நீதி என பேசி வரும் தி.மு.க அரசு இதுபோன்ற சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.