என்ன மாணவர்களே ரெடியா… 1,330 திருக்குறள் ஒப்புவித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

கோவை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.10 ஆயிரம் பரிசு பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குறளில் உள்ள 1,330 குகளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும், திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், கு எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியவர்கள் போன்ற விவரங்கள் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழு முன்னிலையில் நேராய்வுக்குள்படுத்தப்பட்டு பரிசுக்குரியோா் பட்டியல் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கெனவே திருக்குறள் முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க முடியாது.
எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கான விண்ணப்பங்களை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நேரடியாக பெற்றுகொள்ளலாம். தவிர, தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718, 99405- 90165 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.