விஷ்ணுபுரம் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா.!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா விஷ்ணுபுரத்தில் உள்ள ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது 110 வருடம் புகழ்பெற்ற இப்பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா 110 ஆம் ஆண்டு விழா இசை ஆசிரியை ராஜேஸ்வரி பணி நிறைவு பாராட்டுவிழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது .

விழாவிற்கு புகழ் பெற்ற கும்பகோணம் பிரிமியர் குழுமத்தின் தலைவர் கு சௌந்தரராஜன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ் ஆசிரியர் மணிகண்டன் அழகிய தமிழில் செந்தமிழ் கவிதையில் வரவேற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் . எப்போதும் தேனி போல் சுறுசுறுப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் ஆண்டறிக்கை வாசித் தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சொல்லின் செல்வர் பட்டிமன்ற புகழ் பி. மணிகண்டன் தனது சொல் வன்மையாலும் நகைச்சுவை பேச்சினாலும் அனைவரையும் தன் வசம் ஈர்த்தார். அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து அறிவுரை கூறினார் இந்த நிகழ்ச்சி இத்தனை சிறப்பாக வெற்றி பெற அயராது பாடுபட்ட தமிழ் ஆசிரியர் ரகுபதி தமிழர் பாரம்பரிய உடையில் அனைவரையும் அரவணைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் விளையாட்டுப் போட்டிகளிலும் ஓவியம் மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் மக்கள் முழுவதும் திரண்டு வந்து கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு கணித்தனர். கலை நிகழ்ச்சிகளை ஆசிரியை சாந்தி புன்னகையோடும் வர்ணனையோடும் தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு மதிய உணவு பரிமாறப்பட்டது. பள்ளி செயலர் கார்த்திகேயன் அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்திருந்தார் தமிழ் ஆசிரியர் செந்தூர் பாண்டி நன்றி உரை கூற விழா இனிதே முடிவடைந்தது..