வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா திருக்கல்யாண வைபோகம்.!!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 19 வது ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதியன்று திருக்கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கிய நிலையில் இன்றைய தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு மேல் வால்பாறை எம்ஜிஆர் நகர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசைகள் நகர் பகுதியில் மேளதாளம் முழங்க ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு சுமார் 5.30 மணிக்கு மேல் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ வள்ளி நாயகி, ஸ்ரீ தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் செய்து வரும் நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..