காவல் நிலையத்தில் பெண் போலீசுக்கு மிரட்டல் – 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஜோதிமணி இவர் நேற்று காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது விஷ்ணு தர்ஷினி உட்பட 4 பேர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரை படம் எடுத்தனர். இதை பார்த்த ஜோதிமணி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட காரை உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் படம் எடுக்கக்கூடாது என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்ணு தர்ஷினி உட்பட 4 பேர் சேர்ந்து பெண் போலீஸ் ஜோதி மணியை மிரட்டினார்களாம். இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விஷ்ணு தர்ஷினி உட்பட 4 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.