நீட் தேர்வில் அசத்திய கோவை அரசு பள்ளி மாணவர்கள்- 73 பேர் தேர்ச்சி..!

கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய
அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு
எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், 3 பேருக்கு பி.டி.எஸ். ( பல் மருத்துவம்) படிக்கவும் 7.5
சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது. நடப்பாண்டு கலந்தாய்வு முடியும்போது தான், அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.