மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள கஞ்சப்பள்ளி, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி தங்கமணி (வயது 42) கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் சங்கீத்குமார் (வயது 21) உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் .இதனால் மனமுடைந்த தங்கமணி விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.