கோவையில் போதை பொருள் விழிப்புணர்வு 100 கிலோமீட்டர் தூரசைக்கிள் பேரணி .போலீஸ் கமிஷனர் தலைமையில் இன்று நடந்தது…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகோவையில் இன்று நடந்தது. இந்த பேரணி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து, .100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினார்.இந்த பேரணி சாடிவயல், கோவை குற்றாலம், தொண்டாமுத்தூர், நரசிபுரம் ,மருதமலை, வடவள்ளி வழியாக காலை 10 மணிக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தை அடைந்தது.இதில் ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.