நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சாவு…

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் சரவண பாரதி ( வயது 35 )குடிப்பழக்கம் உடையவர். திருமணம் ஆகிகருத்து வேறுபாடு காரணமாக மனைவியைவிட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.. இவர் நேற்றுஅங்குள்ள அன்னை வேளாங்கண்ணி நகரில் வசிக்கும் தனது நண்பர் சரவணகுமார் வீட்டுக்கு விருந்துக்கு சென்று இருந்தார். விருந்து முடிந்து படிக்கட்டு வழியாக இறங்கும்போது திடீரென்று தவறி விழுந்தார் .இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை எடுத்துச் சென்றனர்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வழியில் அவர் இறந்தார்.இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.