திருச்சியில் விவசாய சங்கத்தினர் டெல்லி பயணம்.!!

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி பயணம்..
விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க கோரியும், மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது என்பதற்க்காகவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து 21.04.2024 அதிகாலை 3.10am மணியளவில் நிஜாமுதின் சம்பர்க்ராந்தி எஸ்பிரேஸ் மூலமாக டெல்லி நோக்கி பயணம் செய்கின்றனர்..