நீலகிரிக்கு மாற்றப்பட்ட கோவை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்..!

கோவை மாநகர போலீசில் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). இவர் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தது. இவர் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஊட்டி காந்தல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் தாங்க முடியாததால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.