கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு – 2 கொள்ளையர்கள் கைது.!!

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி .காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 33) எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மருதமலை ரோடு ஐஓபி காலனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 1000 ரூபாயை கொள்ளையடித்தனர். செல்வராஜ் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர் . இருவரும் வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் அவர்களை கைது செய்தார் .விசாரணையில் அவர்கள் கல்வீரம்பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த மஞ்சு என்ற மஞ்சுநாத் (வயது 37) சேகர் என்ற ராஜசேகர் ( வயது 35) என்பது தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் கோவையில் பல காவல் நிலைய திருட்டு ,வழிப்பறி, போன்ற வழக்குகள் உள்ளது..