இன்று சென்னையில் பொது விநியோக சிறப்பு முகாம்- மிஸ் பண்ணிடாதீங்க.!!

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஜுன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணிவரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, பெயர்‌ நீக்கம்‌,முகவரி மாற்றம்‌, கைபேசி எண்‌ பதிவு / மாற்றம்‌ செய்தல்‌ மற்றும்‌ புதிய குடும்ப அட்டை அல்லது நகல்‌ குடும்ப அட்டை கோரும்‌ மனுக்களை பதிவு செய்தல்‌ ஆகிய சேவைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, நியாய விலைக்‌ கடைகளில்‌ பொருள்‌ பெறநேரில்‌ வருகை தர இயலாத மூத்த குடிமக்கள்‌ உள்ளிட்டோருக்கு அங்கீகாரச்‌சான்று வழங்கப்படும்‌.

மேலும்‌, பொது விநியோகக்‌ கடைகளின்‌ செயல்பாடுகள்‌,தனியார்‌ சந்தையில்‌ விற்கப்படும்‌ பொருட்கள்‌ அல்லது சேவைகளில்‌ குறைபாடுகள்‌ குறித்த புகார்கள்‌ எதேனும்‌ இருப்பின்‌ அவற்றை பொதுமக்கள்‌ இம்முகாமில்‌ தெரிவித்தால்‌ குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.