தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி இது கிடையாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!!

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் நலனுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.