கோவையில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி மீது டீசல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை – குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!

கோவை : மதுரையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30)இவர் கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்து கூறி வேலை செய்து வந்தார் .கடந்த 14ஆம் தேதி இரவு சுரேஷ் அந்த பகுதியில் சாலை ஓரத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென அவர் மீது டீசல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டார் .சுரேஷ் உடல் முழுவதும் கருசியது .அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தீவைப்பது போலவும் தப்பி ஓடுவது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது .இதை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஊத்தங்கரை, நொச்சி பட்டியை சேர்ந்த சுப்பிரமணி ( வயது 53) என்பவர் என்பது தெரிய வந்தது.அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்

அப்போது அவர் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியதாவது :-எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைபக்கம் உள்ள நொச்சி பட்டி .நான் கோவையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தேன். அப்போது சக தொழிலாளியான சுரேஷ் என்பவர் என்னுடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். சம்பவத்தில் நாங்கள் இருவரும் மது குடித்த போது எனது பையில் இருந்த பணத்தை சுரேஷ் எனக்கு தெரியாமல் எடுத்ததாக சந்தேகப்பட்டு கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆத்திரத்தில் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பாட்டிலில் டீசலை வாங்கி வந்து சாலை ஓரத்தில் படுத்திருந்த சுரேஷ் மீது தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றுவிட்டேன் என்றார். இதை தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியத்தின் மீதுகொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.