வேலை தருவதாக கூறிபெண்ணிடம் ரூ 5.74 லட்சம் ஆன்லைன் மோசடி.!!

கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி பூர்ணிமா (வயது 39) இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது . அதில் பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பணம் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பூர்ணிமா பல்வேறு தவணைகளில் ரூ 5 லட்சத்து 74 ஆயிரம் அனுப்பி வைத்தார். அவருக்கு எந்த கமிஷனும் வரவில்லை. தொடர்பு கொண்ட போது அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூர்ணிமா கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..