கோவை கல்லூரி மாணவிகள் திடீர் மாயம்..!

கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் சௌந்தர்யா ( வயது 19) இவர் கோவையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் .கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார், இது குறித்து விடுதி சூப்பிரண்டு சக்தி தேவிரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதே போல ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ் .இவரது மகன் நந்தினி ( வயது 20) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி .3-ம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை ,எங்கோ மாயமாகிவிட்டார் .அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தாயார் சுமதி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..