காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு..!

சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக சரிந்துள்ளது.

ஜூன் 12ல் 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.29 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 406 கனஅடியில் இருந்து 651 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.