பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு – பிட் பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை..!

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை கொள்ளை. நகை பிட் பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை..

ஈரோட்டைச் சேர்ந்த ராதா ரூட் நம்பர் 33இல் காந்திபுரம் முதல் டவுன்ஹால் வரை சென்று இருக்கின்றார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வந்த பொழுது தனது ஹேண்ட் பேக்கிலிருந்த மணி பர்ஸ், கம்மல், தங்க சங்கிலி இரண்டரை சவரன் காணாமல் போனதை பார்த்திருக்கின்றார். இதுகுறித்து ராதா தந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பந்தய சாலை போலீசார் பேருந்து நகை கொள்ளையர்களை தேடி வருகின்றனர்..