மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை சிங்கநல்லூர் ஏ .ஜி. புதூர் ரோட்டில் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. அவரது மனைவி சந்திரா (வயது 71) வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது சந்திரா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.