16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கோவை மாவட்டம் ,கருமத்தம்பட்டி அருகே உள்ள ஜங்கம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி. இவரது மகன் வினோத்குமார் ( வயது 27) கூலி தொழிலாளி கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வினோத் குமாரை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.