ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி..

கோவை : மேட்டுப்பாளையம் காந்திபுரம் 4 -வது வீதியைச் சேர்ந்தவர் பன்னாரி, இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்கள் சிவா, விஜய் ,அக்ஷய், ஆகியோருடன் மேட்டுப்பாளையம் , உப்பு பள்ளம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சய் குமார் திடிரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார் . இது குறித்து தாயார் ஜெயா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.