பட்டா கத்தியுடன் ஊருக்குள் நகர்வலம் வந்து வாலிபரால் பரபரப்பு .!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,ஆனைமலை பக்கம் உள்ள திவான் ஷாபுதூரை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மகன் தீனதயாளன் ( வயது 22)இவர் 2 அடி நீள பட்டாக் கத்தியுடன் நகர்வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தினாராம். இது குறித்து ஆனைமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விரைந்து வந்து தீனதயாளனை கைது செய்தனர்.

பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.