கோவை ஓட்டலில் தூக்கு போட்டு சப்ளையர் தற்கொலை..

கோவை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பக்கம் உள்ள பி. புதுப்பட்டியை  சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர் அன்னூர் சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..