கேரளா லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் ,மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59) இவர் பொள்ளாச்சி குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தாராம். இவரை பொள்ளாச்சி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கணேசன மூர்த்தி நேற்று மாலை கைது செய்தார். இவரிடம் இருந்து 81 கேரள மாநில லாட்டரி டிக்கெட் ,பணம் ரூ. 300 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..