பைக்கில் இருந்து தவறி விழுந்து பாலிடெக்னிக் ஆசிரியர் பரிதாப பலி..!

கோவை : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் உள்ள கழுகுமலை, குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் ,இவரது மகன் சதீஷ் (வயது 41 )இவர் கோவை சிங்காநல்லூரில்,ஆர். வி. எல். நகரில் தங்கி இருந்தார். பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறையில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் இவர் அவினாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.