குடிபோதையில் பெண்ணை பின் தொடர்ந்த போலீஸ்காரர்..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ருத்திரியம் பாளையத்தில் நேற்று மதுபோதையில் பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்தார். அவரை அந்த ஊர் மக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அன்னூர், சொக்கம்பாளையம் காந்தி காலனி சேர்ந்த வேல்முருகன் (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். வார முறையில் வந்த போது இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது .போலீசார் இவரிடம் விசாரித்து விட்டு நாளை நேரில் வர அறிவுறுத்தி அனுப்பினர்.