கோவை போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது..!

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் கிரிதரன் .இவர் நேற்று அங்குள்ள முருகா நகர், ஆண்டாள் தோட்டம், மாநகராட்சி தண்ணீர் டாங்க் அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர்.அவர்களை கிரிதரன் பிடிக்க சென்றார் .அப்போது 3பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார் .அவர் ஏட்டு கிரிதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தகாத வார்த்தைகளால் பேசினார் .அவரை ஏட்டு கிரிதரன் கைது செய்தார். இவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல், உட்பட 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.