கோவையில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் பரிதாப பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள கே. என்.. ஜி .புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் (வயது 21) இவர் நேற்று கவுண்டம்பாளையம் எஸ்.எம் .பாளையம் ரோட்டில்,பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர் .அங்கு சிகிச்சை பலனிக்காமல் நரேஷ் நேற்று இறந்தார்.இது குறித்து துடியலூர் போலீசில் அவரது தாயார் ஆனந்தி புகார் செய்தார். போலீசார் பைக் ஓட்டி வந்த முகேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.