வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 85 )இவர் தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.வாரம் ஒருமுறை அவரது வீட்டுக்கு வருவார். அதேபோல நேற்று மனைவியுடன் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், பணம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை . யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து இராமநாதபுரம் போலீசில் நடராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.