கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு..!

கோவை : மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளியே ஒரு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது .இந்த உண்டியலை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..