தனியார் நிறுவன மானேஜர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!

கோவை ரத்தினபுரி ,பூம்புகார் நகரை சேர்ந்தவர் இருதய சாமி இவரது மகன் ஜான்சன் ( வயது 36 )தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்றார் .பின் அங்கிருந்து தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று வீடு திரும்பினார்கள் . அப்போது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், பணம் ரூ 2 லட்சம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜான்சன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா குமாரி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.