ஆன்லைன் லாட்டரி விற்பனை- ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மேகராஜ் (வயது 57 )ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி தொழிலும் செய்து வந்தாராம்.இதுகுறித்து பொள்ளாச்சி டவுன் கிழக்கு பகுதி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஆன்லைன் மூலம் லாட்டரி தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மேகராஜ் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஸ்கூட்டர் ,செல்போன் பணம் ரூ.3,800 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..