காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது: கார் இருந்த நபர் உடல் கருகி உயிரிழப்பு – கோவையில் பரபரப்பு

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது: கார் இருந்த நபர் உடல் கருகி உயிரிழப்பு – கோவையில் பரபரப்பு

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறி உள்ளது. சத்தம் கேட்ட அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் , காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

கோவில் அருகில் இந்த விபத்து நடந்து இருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.