கோவில் திருவிழாவில் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல் – 5 பேர் கைது.!!

கோவை பீளமேடு காவல் நிலைய சிறப்பு செந்தில்குமார் நேற்று தொட்டிபாளையம் பிரிவில் இரவு ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள அத்தி குட்டை அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பீளமேடு போலீசில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்ட தொட்டிபாளையம் பிரிவு, அண்ணா நகர் அத்தி குட்டையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம், ஜான் சதின், பிரதாப், ரஞ்சித் குமார், சக்திவேல் ஆகியோரை கைது செய்தார் . அர்ஜுன், அர்ஜுன் குமார் ஆகியோரை தேடி வருகிறார்கள். இவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..