பணம் கேட்டு கட்டிட காண்ட்ராக்டர் காரில் கடத்தல்- பெண் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு..!

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையம், அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 42) இவர் கட்டிட காண்ட்ராக்ட் மற்றும் சிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார்.கடந்த 25 ஆம் தேதி மணிகண்டன் மனைவி மகேஸ்வரி கோவைபுதூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு காரில் வந்த கும்பல் மணிகண்டனை பணம் கேட்டு மிரட்டியது. பின்னர் அவரது காரிலும், மற்றொரு காரிலும் சீர்காழிக்கு அவரை கடத்திச் சென்றுவிட்டது .அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கி. ரூ5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார்கள் .பின்னர் அவருடைய வங்கி கணக்கில் ரூ 5 லட்சம் போடும்படி மிட்டினார்களாம். இதை யடுத்து அவரது மனைவி ரூ.5 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தினார். அந்த பணத்தை கும்பல் பெற்றுக் கொண்டது. பின்னர் அவரிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டது. இது குறித்து மணிகண்டன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அனிதா கிணத்துகடவு முருகன் ,ராஜா உட்பட 5 பேரை தேடி வருகிறார்கள்.கடத்தப்பட்ட மணிகண்டன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 பேரிடம் ரூ 46லட்சம் பணம் வாங்கி இருந்தாராம்.பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணம் கேட்டு இவரை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.